International Tea Day - நாளொன்றுக்கு இரண்டு வேளை டீ!

ஒவ்வொரு ஆண்டும் மே 21-ம் நாளன்று, பன்னாட்டுத் தேயிலை நாள் (International Tea Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
Drinking Tea
Drinking Tea
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on
  • 2005-ம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில், பிரித்தானியாவின் முதலாவது இந்திய அசாம் தேயிலைத் தோட்டத்தில் சீன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று, மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாளில் இந்நாளைக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று, புதுதில்லியில் நடைபெற்றது.

  • 2015 ஆம் ஆண்டில், இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சந்திப்பின் போது, தேயிலை பற்றிய ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பு, பன்னாட்டு தேயிலை நாள் யோசனை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 2019 டிசம்பர் 21 அன்று கொண்டு வரப்பெற்ற தீர்மானத்தின்படி, உலகில் தேயிலை உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கத்துடன் மே 21 அன்று பன்னாட்டுத் தேயிலை நாளாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு முதல் மே 21 அன்று உலகம் முழுவதும் பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அச்சச்சோ... அப்படி செய்யலாமா?
Drinking Tea
  • தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவக் குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக்கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.

  • 1840 முதல் 1850-ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு, தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தேயிலை பரவியது. சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
தேநீர் பைகளில் ஒளிந்து இருக்கும் ஆபத்து!
Drinking Tea
  • உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்ததாக, அதிகம் பயன்படுத்தப்படும் பானமாக தேநீர் இருக்கிறது. தேநீர் உற்சாகத்தை அளிக்கும் பானமாக இருந்தாலும் சிலர் அதனை வெறும் தேநீராகக் குடிக்காமல், வடை, பிஸ்கட், ரஸ்க் என்று சிறு நொறுக்குத் தின்பண்டங்களைச் சாப்பிட்டுவிட்டு, தேநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

* தேநீர் நோயெதிர்ப்பு செல்களை சீர்படுத்தும் என்பதால் நோயிலிருந்து காக்க உதவுகிறது.

* பச்சைத் தேயிலைத் தேநீர் சாப்பிடுவதால் புற்று நோய் வரும் அபாயம் குறைகிறது.

* தேநீரிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

* காபியில் காணப்படும் காஃபினை விட தேநீர் கலவைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காஃபின் உள்ளது.

* நாள்தோறூம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் பச்சைத் தேயிலை தேநீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

* பச்சைத் தேயிலை தேநீர் எடை குறைப்புக்கு உதவுகிறது.

* பச்சைத் தேயிலை தேநீர் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

என்று தேநீர் குடிப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும், நாளொன்றுக்கு இரண்டு வேளை மட்டும் தேநீர் அருந்துவதுதான் சிறந்தது. இரண்டு வேளைக்கு அதிகமாகும் நிலையில், தேநீர் பசியை மாற்றி விடுகிறது. இதனால், உடலுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமல், பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கையாகக் கொண்டு தேநீர் அருந்துவதில் ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
குளிருக்கேற்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தேநீர் வகைகள்!
Drinking Tea
logo
Kalki Online
kalkionline.com