These 6 Habits Will Make You Peaceful! 
Motivation

இந்த 6 பழக்கங்கள் உங்களை அமைதியானவராக மாற்றும்! 

கிரி கணபதி

அமைதி என்பது வெறும் சொல் மட்டுமல்ல, அது ஒரு நிலை, ஒரு உணர்வு.‌ இன்றைய அவசரமான உலகில் அமைதியாக இருப்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. ஆனால் அமைதி என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து மட்டுமல்லாமல், நம் உள்ளத்தில் இருந்தும் தோன்றும் ஒன்றாகும். அமைதியான மனம் என்பது நம்மை மன அழுத்தம், பதட்டம் போன்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து காக்கிறது. அது நம்முடைய உறவுகளை வலுப்படுத்தி வாழ்க்கையை இனிமையாக்குகிறது. 

  1. தியானம்: தியானம் என்பது நமது மனதை ஒருநிலைப்படுத்தும் நுட்பமாகும். இது நம் மனதை அமைதிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த நடைமுறை. தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம், நம் மனதில் எழும் தேவையில்லாத எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இதனால் மன அழுத்தத்தை குறைத்து, உள் உணர்வுகளுடன் இணைந்து அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். 

  2. இயற்கை: இயற்கையானது நமக்கு மன அமைதியைத் தரும் ஒரு அற்புதமான சக்தி. பச்சை பசேல் என்ற தாவரங்கள், பறவைகளின் கீச் குரல்கள், நீரின் சலசலப்பு போன்ற இயற்கை ஒலிகள் நம் மனதை அமைதிப்படுத்தி நேர்மறையான எண்ணங்களைத் தூண்டும். 

  3. நன்றியுணர்வு: நம் வாழ்வில் நமக்கு இருக்கும் எல்லா விஷயங்களுக்கும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். இது நம் மனதை நேர்மறையாக வைத்திருக்கும் ஒரு சிறந்த வழி. தினமும் நம் வாழ்வில் நடந்த நல்ல விஷயங்களைக் கண்டு நன்றியுடன் இருந்தால், எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகிச் செல்லும். 

  4. வாசித்தல்: வாசித்தல் என்பது ஒரு சிறப்பான அமைதிப்படுத்தும் நுட்பமாகும். அதாவது, ஒருவருக்கு பல விஷயங்கள் தெரிந்திருந்தால், அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்க முடியும். வாசித்தல் மூலமாக பிறரை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அமைதியான வாழ்க்கை முறைக்கு அது வழி வகுக்கும். 

  5. உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் மிகவும் அவசியமானது. உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலில் என்டோர்பின் எனப்படும் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன் சுரக்கும். இது நம் மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும். 

  6. நல்ல உறவுகள்: நல்ல உறவுகள் அனைவரது வாழ்வுக்கும் மிகவும் முக்கியமானவை. நம்மை நேசிக்கும், ஆதரிக்கும் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, நம் மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்.‌

மேற்கண்ட பழக்கங்களை நம் வாழ்வில் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நாம் மன அமைதியை அடைய முடியும். அமைதியான மனம் என்பது நம்மை வெற்றியின் உச்சத்தை அடைய உதவும். இன்று முதல் இந்தப் பழக்கங்களை உங்கள் வாழ்வில் செயல்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முற்படுங்கள். 

இப்படி இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்! 

பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தெரியுமா?

சிறுகதை: காதல் பூ!

மறந்தும் கூட தயிருடன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்! 

சிறுகதை: ரயில் பயணம்!

SCROLL FOR NEXT