Reserve Forest 
பசுமை / சுற்றுச்சூழல்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ரிசர்வ் காடுகள்!

A.N.ராகுல்

உலகிலேயே மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் வளமான வன இருப்புக்கள் (Forest Reserves) சிலவற்றை இந்தியா கொண்டுள்ளது. இந்த ரிசர்வ் காடுகள் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவது மட்டுமல்லாமல், இயற்கை ஆர்வலர்களுக்கு தனித்துவமான இடங்களையும் வழங்குகிறது. இந்தியாவில் உள்ள சில சிறந்த வன இருப்புக்கள் (Forest Reserves) மற்றும் அவற்றின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா (Jim Corbett National Park):

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால்(Nainital) மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, 1936 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான தேசியப் பூங்கா ஆகும். வங்காளப் புலிகளின் இருப்பிடத்திற்கு புகழ்பெற்றது. புகழ்பெற்ற வேட்டைக்காரனாக மாறிய பாதுகாவலர் ஜிம் கார்பெட்டின்(Jim Corbett) பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தேசிய பூங்காவில், பார்வையாளர்கள் ஜங்கிள் சஃபாரி(jungle safaris), பறவை கண்காணிப்பு மற்றும் ரிவர் ராஃப்டிங்(River rafting) போன்றவற்றை அனுபவிக்கலாம். இந்த பூங்காவில் சிறுத்தைகள், யானைகள் மற்றும் பல வகையான மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளும் வாழ்கின்றன.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (Nilgiri Biosphere Reserve):

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் இதன் எல்லை உள்ளது. இதில் முதுமலை, முகூர்த்தி, வயநாடு மற்றும் பந்திப்பூர் போன்ற பல தேசிய பூங்காக்கள் உள்ளன. அழிந்துவரும் நீலகிரி தஹ்ர்(Nilgiri Tahr) மற்றும் சிங்கவால் மக்காக்(Lion-tailed Macaque) உள்ளிட்ட பல வளமான பல்லுயிர்(Biodiversity) பெருக்கத்திற்கு இந்த காப்பகம் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது. இது 3300 க்கும் மேற்பட்ட தாவர வகைகளை கொண்டுள்ளது, இதனால் தாவரவியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இந்தக் காப்பகம் திகழ்கிறது.

சுந்தரவன தேசிய பூங்கா (Sundarbans National Park):

மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள சுந்தரவனக் காடு, உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு(mangrove forest) மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இந்த இடம் ராயல் பெங்கால் புலிகளின் (Royal Bengal Tigers) இருப்பிடத்திற்கு பிரபலமானது, இந்த புலிகள் நீரிலும், நிலத்திலும் வாழ பழகியவை. உப்பு நீர் முதலைகள், புள்ளி மான்கள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளின் உலகமாக சுந்தரவனக் காடுகளின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு விளங்குகிறது. இங்குள்ள சதுப்பு நில சிற்றோடைகளின் வழியாக படகு சஃபாரிகள் செய்து இந்தக் காடுகளை ஆராய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

காசிரங்கா தேசிய பூங்கா (Kaziranga National Park):

அசாமில் அமைந்துள்ளது காசிரங்கா தேசியப் பூங்கா. இது இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின்(one-horned rhinoceros) இருப்பிடத்திற்கு நன்கு அறியப்படுகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இந்த பூங்காவில் புலிகள், யானைகள் மற்றும் காட்டு நீர் எருமைகள் உள்ளன. காசிரங்காவின் பரந்த புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்கள் வனவிலங்கு புகைப்படம் எடுப்பதற்கும் பறவைகளைப் பார்ப்பதற்கும் சிறந்த வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.

பெரியார் வனவிலங்கு சரணாலயம் (Periyar Wildlife Sanctuary):

கேரளாவில் அமைந்துள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம், அதன் அழகிய ஏரியில் படகு சவாரி செய்துகொண்டே வன விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த சரணாலயம் யானைகள், புலிகள் மற்றும் பலவகையான பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது. பசுமையான நிலப்பரப்பு மற்றும் அமைதியான சூழல் நிலவுவதால் சுற்றுலாவிற்கு இது பிரபலமான இடமாக அமைகிறது.

மக்காச்சோளம் Vs ஸ்வீட் கார்ன்: உடலுக்கு ஆரோக்கியம் தருவது எது?

கர்ணன் கற்றது வில் வித்தையல்ல; வேத வித்தை!

நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்!

அளவில் சின்னது, எடையில் பெரியது… அது என்னது? 

பேருதான் மூக்குச்சளி… ஆனால், ஆரோக்கியம் அப்பப்பா! 

SCROLL FOR NEXT