

வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது போல் தான். வீட்டு வேலைகளை செய்து, குழந்தைகளை கவனித்து வேலைக்கும் சென்று வரும் பொழுது தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வதற்கான நேரம் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும். கிடைக்கும் அந்த நேரத்தில் தினமும் வெறும் 5 நிமிடங்களில் முகத்தைப் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றக்கூடிய எளிய காலை ஸ்கின்கேர் ரொட்டீன் இதோ
நிமிடம் 1: மென்மையான சுத்தம் :
காலையில் எழுந்ததும் லேசான ஃபேஸ் வாஷ் (Face wash) அல்லது அரிசி கழுவிய நீரால் முகத்தைக் கழுவவும். இரவில் சருமத்தில் சேர்ந்த எண்ணெய் மற்றும் இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.
நிமிடம் 2: ரோஸ் வாட்டர் டோனர் :
முகத்தைத் துடைத்த பிறகு, ரோஸ் வாட்டரை (Rose water) முகத்தில் ஸ்ப்ரே செய்யவும் அல்லது கைகளில் எடுத்து லேசாகத் தட்டி (Tap) விடவும். இது சருமத்தின் கார-அமிலத் தன்மையைச் (pH level) சீராக்கி, முகத் துவாரங்களைச் சுருக்கி உடனடி பளபளப்பைத் தரும்.
நிமிடம் 3 & 4: மாய்ஸ்சரைசர் + சன்ஸ்கிரீன் :
உங்கள் சருமத்திற்கு ஏற்ற லேசான மாய்ஸ்சரைசரைப் (Moisturizer) பூசவும். அதற்கு மேல் கட்டாயம் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் (Sunscreen) பயன்படுத்தவும். (அல்லது மாய்ஸ்சரைசரும் சன்ஸ்கிரீனும் கலந்த 2-in-1 Cream பயன்படுத்தலாம்). இதனால் ஏற்படும் நன்மைகள் அபரி மிதமானது. சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, நாள் முழுவதும் முகத்தை ஈரப்பதத்துடன் வைக்கும்.
நிமிடம் 5: உடனடி பொலிவுத் தொடுதல் :
உதடுகளுக்கு இயற்கை நிறம் தரும் லிப் பாம் (Lip balm) அல்லது லேசான லிப்ஸ்டிக். கண்களுக்குக் மை/காஜல் மற்றும் விருப்பப்பட்டால் லேசான பிபி கிரீம் (BB Cream) அல்லது பவுடர்.
வார நாட்களில் நேரம் இல்லாததால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த 5 நிமிட இயற்கை ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்:
கஸ்தூரி மஞ்சள் + தயிர் / பால் இவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடம் கழித்து விட்டுக் கழுவினால் வாரம் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்கும்.
முக்கியக் குறிப்பு:
அவசரத்திலும் மறக்காமல் காலையில் 2 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். உள்ளுறுப்புகள் நீரேற்றத்துடன் (Hydrated) இருந்தால் மட்டுமே சருமம் இயற்கையாகவே பளபளக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பையில் இது போன்ற அழகு குறிப்புகளுக்கான பொருட்களை சேமித்து எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பது அவசியம்.
காலையில் அவசரமாக வேலைக்குக் கிளம்பும் போது சருமத்தை உடனடி பிரகாசமாக்க உதவும் 5 எளிய இயற்கை வழிகள் மட்டுமே பின்பற்றுபவர்களுக்கு இதோ:
1. அரிசி கழுவிய நீர் (Rice Water):
காலையில் அரிசி கழுவிய முதல் நீரைக் செல்லமாக முகத்தில் தெளித்து 1 நிமிடம் கழித்துக் கழுவினால், சருமத் துவாரங்கள் சுருங்கி முகம் உடனடியாகப் பளபளக்கும்.
2. பச்சை பால் (Raw milk):
பஞ்சில் சிறிது காய்ச்சாத பாலைத் தொட்டு முகத்தில் துடைத்து எடுத்தால், சரும அழுக்குகள் நீங்கி முகம் இயற்கையான ஈரப்பதத்தோடு பிரகாசிக்கும்.
3. கற்றாழை ஜெல் (Aloe Vera Gel):
சிறிதளவு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 1 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்தால், சோர்வு நீங்கி முகம் உடனடி புத்துணர்ச்சி பெறும்.
4. ரோஸ் வாட்டர் (Rose Water):
ரோஸ் வாட்டரை முகத்தில் தெளிப்பதே (Spray) சருமத்திற்குப் பொலிவையும், நாள்முழுவதும் நல்ல நறுமணத்தையும் தரும்.
5. வெள்ளரிக்காய் / தக்காளி சாறு:
தக்காளி அல்லது வெள்ளரிக்காய் துண்டை வைத்து முகத்தில் லேசாகத் தேய்த்துக் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையும் கரும்புள்ளிகளும் மறைந்து முகம் பளிச்சிடும்.
சமையலறை மற்றும் கூடத்தில் உள்ள காய்கறி, பழங்களைக் கொண்டு ஒரே நிமிடத்தில் செய்யக்கூடிய 5 உடனடி அழகு குறிப்புகள் இதோ:
1. தக்காளித் துண்டு (Instant Glow):
பாதியாக நறுக்கிய தக்காளியை முகத்தில் வட்ட வடிவில் 1-2 நிமிடங்கள் லேசாகத் தேய்த்துக் கழுவினால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி உடனடி பிரகாசம் கிடைக்கும்.
2. உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்குத் துண்டை வைத்துக் கண்களைச் சுற்றிலும், கரும்புள்ளிகள் உள்ள இடத்திலும் தேய்த்தால், கருவளையமும், மங்கு போன்ற தழும்புகளும் படிப்படியாக மறையும்.
3. வாழைப்பழத்தோல் (Acne & Soft Skin):
சாப்பிட்டு தூக்கி எறியும் வாழைப்பழத் தோலின் உட்பகுதியை முகத்தில் லேசாகத் தேய்த்தால், சருமம் மிருதுவாகிப் முகப்பரு அழற்சி குறையும்.
4. வெள்ளரிக்காய் வளையங்கள் (Puffy Eyes & Cooling):
நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களின் மேல் 5 நிமிடங்கள் வைத்தால், கண் எரிச்சல் மற்றும் வீக்கம் நீங்கி முகம் புத்துணர்ச்சி பெறும்.
5. பப்பாளி கூழ் (Natural Exfoliation):
நன்றாகக் கணிந்த பப்பாளித் துண்டை முகத்தில் தடவி 2 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
வேலைக்குப் போகும் பெண்களே: இவைகளில் உங்களுக்கு எதை எளிதாக செய்து கொண்டு அழகை மேம்படுத்திக் கொள்ள முடியுமோ அவற்றை தேர்ந்தெடுத்து செய்து பயன் பெறலாம்.
இதை வாசிப்பதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்களுக்கு அழகு குறிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். சட்டென்று செய்வதற்கு இவை கை கொடுக்கும்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வைட்டமின் சி, இயற்கை நொதிகள் (Enzymes) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஈரப்பதத்தையும் உடனடி பொலிவையும் தருகின்றன எனத் தாவரவியல் மற்றும் சருமவியல் (Dermatology) ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பணிக்குச் செல்லும் அவசரத்திலும் உங்களின் முகத்தை நாள் முழுவதும் ஈரப்பதத்தோடும் இயற்கை மிளிரோடும் வைத்திருக்க முடியும். சமையலறைப் பொருட்களைக் கொண்டு நொடிப் பொழுதில் சருமப் பராமரிப்பு தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்.